இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக ரவிசாஸ்திரியை மீண்டும் நியமித்திருக்கக்கூடாது - சவுரவ் கங்குலி பரபரப்பு பேட்டி
Oct 18 2019 7:00PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக ரவிசாஸ்திரியை மீண்டும் நியமித்திருக்கக்கூடாது என சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய அணிக்கு முதன்முறையாக ரவிசாஸ்திரியை பயிற்சியாளராக தேர்வு செய்த குழுவில், சச்சின் டெண்டுல்கர், கங்குலி, லெட்சுமண் ஆகிய மூன்று பேர் இருந்தனர். இந்த மூன்று பேரும் தான், முதல்முறையாக ரவிசாஸ்திரியை தேர்வு செய்து BCCI-க்கு பரிந்துரை செய்தனர். ஆனால், பயிற்சியாளர் நேர்முகத் தேர்வுக்காக ரவிசாஸ்திரியை அழைத்தபோது, வெளிநாட்டில் இருப்பதால், தன்னால் உடனடியாக வரமுடியாது என்றும், தேவைப்பட்டால் வீடியோ கான்பரன்ஸிங் மூலம் நேர்காணல் நடத்தலாம் என்றும் ரவிசாஸ்திரி தெரிவித்தார். ஆனால், ரவி சாஸ்திரியை நேர்காணல் செய்யும்போது, கங்குலி வராமல் தவிர்த்துவிட்டார். இது, அவமரியாதைக்குரிய செயல் என ரவிசாஸ்திரி தெரிவித்ததால், இப்பிரச்னையில் சர்ச்சை வெடித்தது. அப்போதிருந்தே, கங்குலி, சாஸ்திரி இடையே பிரச்னை இருந்து வந்தது.
இந்நிலையில், BCCI தலைவர் கங்குலி, கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் பேசினார். இந்திய அணிக்கு தலைமைப் பயிற்சியாளராக ரவிசாஸ்திரியை மீண்டும் தேர்வு செய்திருக்கக்கூடாது என கங்குலி தெரிவித்தார். முரண்பாடுகள் இருந்தபோதே, மீண்டும் அவர் தலைமைப் பயிற்சியாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் கங்குலி குறிப்பிட்டார். சவுரவ் கங்குலியின் இந்த கருத்து, கங்குலி-ரவிசாஸ்திரி இடையே ஏற்கெனவே இருந்துவரும் பிரச்னையை மேலும் கிளறிவிட்டுள்ளது.