ராஞ்சி டெஸ்ட் கிரிக்கெட்டில் 162 ரன்களில் சுருண்டது தென்னாப்பிரிக்கா - இந்திய பந்துவீச்சாளர்கள் அபாரம்
Oct 21 2019 4:14PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ராஞ்சியில் நடைபெற்றுவரும் 3வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட்டிலும் தென்னாப்பிரிக்கா திணறி வருகிறது.
இப்போட்டியின் முதல் இன்னிங்சில் இந்தியா 497 ரன்களை குவித்து டிக்ளர் செய்தது. இதையடுத்து நேற்று பேட்டிங்கை தொடங்கிய தென்னாப்பிரிக்கா, ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட்டுக்கு 9 ரன்கள் எடுத்திருந்தது. இன்று போட்டி தொடங்கியதும், அந்த அணியின் எஞ்சிய விக்கெட்டுகளும் மளமளவென சரிந்தன. அந்த அணியின் அம்சா மட்டுமே தாக்குப்பிடித்து விளையாடி 62 ரன்கள் எடுத்தார். இதேபோல் பவுமா, லிண்டே ஆகியோரும் ஓரளவு சிறப்பாக விளையாடி ரன்களை சேர்த்தனர். எனினும் தென்னாப்பிரிக்க அணி இந்திய வீரர்களின் அபார பந்துவீச்சால் 162 ரன்களுக்கு முதல் இன்னிங்சை இழந்தது. இதன்மூலம் இந்திய அணி முதல் இன்னிங்சில் 335 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையை எட்டியுள்ளது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக உமேஷ் யாதவ் 3 விக்கெட்டுகளையும், ஷமி, நதீம், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.