டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை பகல்-இரவு ஆட்டமாக நடத்த வேண்டும் : பி.சி.சி.ஐ. தலைவர் சவ்ரவ் கங்குலி வலியுறுத்தல்
Oct 26 2019 11:55AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ரசிகர்களைக் கவரும் வகையில், டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளை, பகல் - இரவு ஆட்டங்களாக நடத்த வேண்டும் என பி.சி.சி.ஐ. தலைவர் திரு. சவ்ரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் 39-வது தலைவராக சவ்ரவ் கங்குலி பொறுப்பேற்றதை அடுத்து, பெங்கால் கிரிக்கெட் சங்கத்தின் சார்பில், அவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது. இதில் பங்கேற்றுப் பேசிய சவ்ரவ் கங்குலி, டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை பகல் - இரவு ஆட்டங்களாக நடத்துவதே தனது விருப்பம் எனவும், இது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெறும் என்றும் தெரிவித்துள்ளார். எனினும், இது நடைபெறும் நாளுக்காக காத்திருப்பதாக தெரிவித்த அவர், பகல்-இரவு டெஸ்ட் போட்டியை நடத்துவது குறித்து, இந்திய கேப்டன் விராட் கோலி ஏற்றுக்கொள்வார் என தாம் நம்புவதாகவும், அவர் ஒப்புக்கொண்டால் விரைவில் இது சாத்தியமாகும் என்றும் குறிப்பிட்டார்.