மாநில அளவிலான கராத்தே போட்டி : மாணவ-மாணவியர் ஆர்வம்
Nov 3 2019 6:00PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
Mountain of black belt shotokhan Karate அமைப்பு சார்பாக, முதலாவது மாநில அளவிலான ஒபன் கராத்தே போட்டி, சென்னை புனித தோமையர் மலை பகுதியில் நடைப்பெற்றது.
இந்தப் போட்டியில், 6 வயது முதல் 30 வயது வரை உள்ள, 800-க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் கலந்துகொண்டனர். பல்வேறு பிரிவுகளில் நடைப்பெறும் போட்டியில் வெற்றிபெறுபவர்கள் தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்க உள்ளனர். கராத்தே கற்பதால் உடல்வலிமை, மனவலிமை அதிகரிப்பதாகவும், தன்னம்பிக்கை வளர்வதாகவும் கராத்தே அகாடமி இன்டேர்நேஷனல் தலைமை ஆசிரியர் தெரிவித்தார்.
கராத்தே போட்டியை கற்பதால், தற்காப்புடன் இருப்பதாகவும், தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்க ஆவலுடன் உள்ளதாகவும் காரத்தே போட்டியில் பங்கேற்ற மாணவி தெரிவித்தார்.