பங்களாதேஷ் அணிக்கு எதிரான மூன்றாவது சர்வதேச டி20 போட்டி - தொடரை கைப்பற்றுமா இந்திய அணி?
Nov 10 2019 2:00PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பங்களாதேஷ் அணிக்கு எதிராக, இன்று நடைபெறும் கடைசி மற்றும் மூன்றாவது சர்வதேச டி20 போட்டியில், இந்திய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்தியா வந்துள்ள பங்களாதேஷ் கிரிக்கெட் அணி, மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. டெல்லியில் நடைபெற்ற முதல் டி20 கிரிக்கெட் போட்டியில், பங்களாதேஷ் அணி வெற்றி பெற்றது. இதையடுத்து, குஜராத் மாநிலம், ராஜ்கோட்டில் நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில், இந்திய அணி அபார வெற்றி பெற்றது. மூன்று போட்டிகள் தொடரில், ஒன்றுக்கு ஒன்று என இரண்டு அணிகளும் சமநிலையில் உள்ளன.
இந்நிலையில், தொடர் வெற்றியாளரை தீர்மானிக்கும் கடைசி மற்றும் மூன்றாவது சர்வதேச டி20 போட்டி, மஹாராஷ்டிர மாநிலம், நாக்பூரில் இன்று இரவு ஏழு மணிக்கு தொடங்குகிறது. இந்திய அணியை பொறுத்தவரை, கேப்டன் ரோகித் சர்மா, ஸ்ரேயாஷ் அய்யர் உள்ளிட்டோர் நல்ல பார்மில் உள்ளனர். பங்களாதேஷ் அணி வீரர்கள் முழுத் திறமையை வெளிப்படுத்தி, இந்திய அணிக்கு எதிராக முதன்முறையாக தொடரை கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்பில் உள்ளனர்.
இந்த போட்டியில் வெற்றி பெற்று, தொடரை இந்திய அணி வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது. தொடரை கைப்பற்ற இரண்டு அணிகளுமே கடும் போட்டி போடும் என்பதால், ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது.