சி.பி.எஸ்.இ. பள்ளிகள் இடையேயான டேபிள் டென்னிஸ் : சென்னை மாணவிக்கு சாம்பியன் பட்டம்
Nov 15 2019 10:42AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
உத்தரப்பிரதேச மாநிலத்தில் C.B.S.E. பள்ளிகளுக்கு இடையே நடைபெற்ற தேசிய அளவிலான டேபிள் டென்னிஸ் போட்டியில், சென்னை பத்மா சேஷாத்திரி பள்ளி மாணவி மிருதுளா சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். அம்மாநிலத்தின் நூர்புரி பகுதியில் நடைபெற்ற இந்தப் போட்டியில், நாடு முழுவதிலும் இருந்து சுமார் 500 C.B.S.E. பள்ளி மாணவ-மாணவிகள் பங்கேற்றனர். 19 வயதுக்கு உட்பட்டோருக்கான மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் மாணவி மிருதுளாவும், பஞ்சாப் பள்ளி மாணவி ஆருஷியும் மோதினார்கள். விறுப்பான இந்த ஆட்டத்தில் 11-5, 11-7, 11-6 என்ற செட்களில் வெற்றி பெற்று மிருதுளா தங்கம் வென்றார். இவர், சென்னை தமிழ்நாடு காவல்துறையில் ஆய்வாளராகப் பணிபுரியும் ராஜேஷ் என்பவரின் மகள் ஆவார்.