பங்களாதேஷுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியா ரன் குவிப்பு - தொடக்க வீரர் மயங்க் அகர்வால் அபார சதம்
Nov 15 2019 3:18PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்தூரில் நடைபெற்றுவரும் பங்களதேஷுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணி தொடர்ந்து ரன்களைக் குவித்து வருகிறது.
இந்தப் போட்டியின் முதல் இன்னிங்சில் பங்களாதேஷ் 150 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில், இந்தியா தனது முதல் இன்னிங்சை 2ம் நாளாக இன்றும் தொடர்ந்து விளையாடி வருகிறது. புஜாரா, கோலி ஆகியோர் ஆட்டம் இழந்த பிறகு ஜோடி சேர்ந்த ரஹானேவும், மயங்க் அகர்வாலும் சிறப்பாக விளையாடி ரன்களைக் குவித்தனர். மயங்க் அகர்வால் தனது 3வது டெஸ்ட் சதத்தை நிறைவு செய்தார். ரஹானே-யும் அரை சதம் கடந்தார்.