டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டி : ரோகன் போபண்ணா விலகல்
Nov 19 2019 9:59AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பாகிஸ்தானுக்கு எதிரான டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் இருந்து, காயம் காரணமாக மூத்த வீரர் ரோகன் போபண்ணா விலகியுள்ளார்.
இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டேவிஸ் கோப்பை டென்னிஸ், ஆசிய-ஓசியானா குரூப்1 போட்டி வரும் 29, 30ம் தேதிகளில் நடைபெறவுள்ளது. இதற்கான இந்திய அணியில் மூத்த வீரர் ரோகன் போபண்ணா இடம்பெற்றிருந்தார். பயிற்சியின்போது அவருக்கு தோள்பட்டை பகுதியில் காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, இப்போட்டியில் இருந்து விலகுவதாக போபண்ணா அறிவித்துள்ளார். அவருக்கு பதிலாக தமிழக வீரர் ஜீவன் நெடுஞ்செழியன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.