சீனாவில் நடைபெறும் உலகக்கோப்பை துப்பாக்கி சுடும் போட்டி - தமிழக வீராங்கனை மூலம் இந்தியாவிற்கு இன்னொரு தங்கம்
Nov 21 2019 3:11PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சீனாவில் நடைபெறும் உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில், இந்தியாவிற்கு இன்று3 தங்கப்பதக்கங்கள் கிடைத்துள்ளன. தமிழக வீராங்கனை இளவேனில் வாலறிவனும் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
சீனாவின் புடியான் நகரில் உலகக்கோப்பை துப்பாக்கிச் சுடுதல் இறுதிச்சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் இந்தியாவின் இளம் வீராங்கனை மனு பாக்கர் இன்று காலை நடைபெற்ற 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில், 244 புள்ளி 7 புள்ளிகளுடன் தங்கம் வென்று சாதித்தார். அத்துடன் ஜூனியர் பிரிவில் புதிய உலக சாதனையையும் படைத்துள்ளார்.
10 மீட்டர் ஏர்ரைபிள் பிரிவில் பங்கேற்ற தமிழக வீராங்கனை இளவேனில் வாலறிவனும் முதலிடம் பிடித்தார். அவர், மொத்தம் 250 புள்ளிகளை குவித்து தங்கம் வென்றார்.
இதேபோல், ஆடவர் 10 மீட்டர் ஏர்ரைபிள் பிரிவில் இந்திய வீரர் திவ்யன்சிங் பன்வாரும் தங்கம் வென்றார். இறுதிச்சுற்றில் மிகச் சிறப்பாக செயல்பட்ட அவர், அதிக புள்ளிகளுடன் முதலிடம் பிடித்தார். இந்தியாவுக்கு இன்று ஒரே நாளில் மூன்று
தங்கப்பதக்கங்கள் கிடைத்ததால், பதக்கப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியது.