விளையாட்டு வீரர்கள் தேர்வு ஒளிவுமறைவின்றி நடைபெறுகிறது : மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தகவல்
Nov 21 2019 5:57PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சர்வதேச போட்டிகளுக்கு விளையாட்டு வீரர்கள் தேர்வு, ஒளிவுமறைவின்றி நடைபெறுகிறது என்று மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் திரு. கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார்.
மக்களவையில் இன்று பேசிய, பா.ஜ.க.,வைச் சேர்ந்த மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் திரு. கிரண் ரிஜிஜூ, சர்வதேச போட்டிகளில் விளையாட்டு வீரர்களை தேர்வு செய்யும் நடைமுறை நேர்மையுடனும், ஒளிவுமறைவின்றியும் நடைபெறுகிறது என்றும், வீரர்கள் தேர்வில் முரண்பாடுகள் இருந்தால், அரசு நடவடிக்கை எடுக்கும் என்று விளையாட்டு கூட்டமைப்புகளிடம் தெரிவித்து உள்ளதாகவும் கூறினார்.
விளையாட்டு வீரர்களின் அனைத்து செலவுகளை அரசே ஏற்கிறது என்றுக் குறிப்பிட்ட அவர், இந்திய ஒலிம்பிக் கூட்டமைப்பு உள்ளிட்ட அனைத்து விளையாட்டு கூட்டமைப்புகளும் அரசுடன் இணக்கமுடன் செயல்பட்டு வருவதாகவும், முன்னாள் வீரர்களுக்கும் அரசு நிதியுதவி செய்து வருவதாகவும், மத்திய அமைச்சர் திரு. கிரண் ரிஜிஜூ தெரிவித்தார்.