கொல்கத்தாவில் நடைபெறும் பகலிரவு டெஸ்ட் கிரிக்கெட் போட்டி - இந்தியாவின் அபார பந்துவீச்சால் 2-வது இன்னிங்சிலும் ரன் எடுக்க திணறும் பங்களாதேஷ்
Nov 24 2019 12:57PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கொல்கத்தாவில் நடைபெற்று வரும் பகலிரவு டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின், இரண்டாம் இன்னிங்சிஸும் இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் பங்களாதேஷ் அணி திணறி வருகிறது.
இந்தியா - பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் பகலிரவு ஆட்டமாக நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று பேட்டிங் செய்த பங்களாதேஷ் அணி, முதல் இன்னிங்சில், 106 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய வேகப் பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா, 5 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.
இதைத் தொடர்ந்து, முதல் இன்னிங்சை விளையாடிய இந்திய அணி, கேப்டன் விராட் கோலியின் அதிரடி சதத்தால், 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 347 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில், தனது 27-வது சதத்தை கேப்டன் விராட் கோலி பதிவு செய்தார். மேலும், டெஸ்ட் கிரிக்கெட்டில் கேப்டனாக 5 ஆயிரம் ரன்களை கடந்தும் சாதனை படைத்தார்.
இதன்பின்னர், இரண்டாவது இன்னிங்சை விளையாடிய பங்களாதேஷ் அணி, இந்திய வேகப்பந்து வீச்சை மீண்டும் சமாளிக்க முடியாமல் திணறியது. இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில், பங்களாதேஷ் அணி, 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 152 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய அணி தரப்பில், இஷாந்த் சர்மா 4 விகெட்டுகளும், உமேஷ் யாதவ், 2 விக்கெட்டுகளும் எடுத்தனர்.
இந்திய அணியை விட, பங்களாதேஷ் அணி, 89 ரன்கள் பின்தங்கியுள்ளது. இன்று பிற்பகல் 1 மணிக்கு மூன்றாம் நாள் ஆட்டம் நடைபெற உள்ளது. இதில், விரைவில் அனைத்து விக்கெட்டுகளையும் இந்திய அணி கைப்பற்றும் பட்சத்தில், மீண்டும் இன்னிங்ஸ் வெற்றி பெறக் கூடும்.