ஈரோடு மாவட்டத்தில் தனியார் செவிலியர் கல்லூரி சார்பில் மரங்கள் வளர்ப்பு, பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு - 300க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பங்கேற்ற மாரத்தான் ஓட்டம்
Nov 25 2019 8:34PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஈரோடு மாவட்டம் பவானியில் தனியார் செவிலியர் கல்லூரி சார்பில் மரங்கள் வளர்ப்பு குறித்தும், பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாரத்தான் போட்டி நடைபெற்றது. 300க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்ட இப்போட்டியில், ஐந்து கிலோமீட்டர் தூரத்தை 26 நிமிடங்களில் கடந்து சக்திவேல் என்ற மாணவர் ஆண்கள் பிரிவில் முதல் பரிசையும், பெண்கள் பிரிவில் கீர்த்தனா என்ற மாணவி முதல் பரிசையும் பெற்றனர்.