எனது மகன், மகளுக்கு டுவிட்டர் கணக்கு இல்லை : கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் விளக்கம்

Nov 27 2019 5:58PM
எழுத்தின் அளவு: அ + அ -

தனது மகன் மற்றும் மகளுக்கு, டுவிட்டர் கணக்கு இல்லை என்றும், அவர்களது பெயரில் போலி கணக்குகள் தொடங்கப்பட்டு, அவதூறு கருத்துக்கள் பரப்பப்பட்டு வருகின்றன என்றும், கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் விளக்கமளித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் தெண்டுல்கரின் மகன் அர்ஜுன் தெண்டுல்கர் பெயரில், சமூக வலைதளமான டுவிட்டரில் கணக்கு தொடங்கப்பட்டு, முக்கிய பிரமுகர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு எதிராக, அவதூறு கருத்துக்கள் பரப்பப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், இந்த விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், சச்சின் தெண்டுல்கர் விளக்கமளித்துள்ளார். அவர் வெளியி‌ட்டுள்ள டுவிட்டர் பதிவில், தனது மகன் மற்றும் மகளுக்கு டுவிட்டரில் கணக்கு இல்லை என்றும், அவர்களது பெயரில் போலி கணக்குகள் தொடங்கப்பட்டு முக்கிய பிரமுகர்கள் மீது அவதூறு கருத்துக்கள் பரப்பப்பட்டு வருகின்றன என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த போலி கணக்குகள் மீது, டுவிட்டர் நிறுவனம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சச்சின் தெண்டுல்கர் வலியுறுத்தி உள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00