13-வது தெற்காசிய விளையாட்டு போட்டிகள் : நேபாள தலைநகர் காட்மாண்டுவில் தொடக்கம்
Dec 1 2019 4:57PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நேபாள தலைநகர் காட்மாண்டுவில் தெற்காசிய விளையாட்டு போட்டிகள் இன்று தொடங்குகின்றன.
நேபாளம், வங்கதேசம், பூடான், இந்தியா, மாலத்தீவு, பாகிஸ்தான், இலங்கை ஆகிய 7 நாடுகள் பங்கேற்கும் 13வது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் காத்மண்டு, போக்ஹரா ஆகிய நகரங்களில் இன்று முதல் 10ம் தேதி வரை நடக்கிறது. ஒருசில போட்டிகள் முன்னமே தொடங்கிவிட்டன. இந்த போட்டியின் அதிகாரபூர்வ தொடக்க விழா காத்மண்டில் இன்று மாலை நடைபெறுகிறது. போட்டியில் 7 நாடுகளைச் சேர்ந்த இரண்டாயிரத்து 700 வீர வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். இதில் வில்வித்தை, தடகளம், பேட்மிண்டன், கூடைப்பந்து, கைப்பந்து, குத்துச்சண்டை, கபடி, துப்பாக்கி சுடுதல், நீச்சல், டென்னிஸ், மல்யுத்தம் உள்பட 27 வகையான போட்டிகள் நடத்தப்படுகின்றன. 319 தங்கம் உள்பட 1,119 பதக்கங்கள் வெற்றி பெறுபவர்களுக்கு வழங்கப்பட உள்ளன.