சையத் முஷ்டாக் அலி கோப்பை கிரிக்கெட் தொடரின் பரபரப்பான இறுதி ஆட்டம் - ஒரு ரன் வித்தியாசத்தில் தமிழக அணியை வீழ்த்தி, கர்நாடக அணி சாம்பியன்
Dec 2 2019 11:07AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சையத் முஷ்டாக் அலி கோப்பை கிரிக்கெட் தொடரின் பரபரப்பான இறுதி ஆட்டத்தில், ஒரு ரன் வித்தியாசத்தில் தமிழக அணியை வீழ்த்தி, கர்நாடகா அணி மீண்டும் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
சையத் முஷ்டாக் அலி கோப்பை தொடரின் இறுதிப்போட்டி, குஜராத் மாநிலம் சூரத்தில் நடைபெற்றது. இதில், தமிழகம் மற்றும் கர்நாடகா அணிகள் மோதின. டாஸ் வென்ற தமிழக அணி, முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதன்படி, முதலில் களமிறங்கிய கர்நாடக அணி, மணீஷ் பாண்டேவின் சிறப்பான அரை சதத்தால், 20 ஓவர்களில், 5 விக்கெட் இழப்புக்கு, 180 ரன்கள் குவித்தது. தமிழகம் சார்பில், ரவிச்சந்திரன் அஷ்வின், முருகன் அஷ்வின் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
181 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தமிழக அணியில், முன்னணி ஆட்டக்காரர்கள் ஓரளவு ரன் எடுத்தனர். வாஷிங்டன் சுந்தர் 24 ரன்கள், தினேஷ் கார்த்திக் 20 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். பொறுப்புடன் ஆடிய விஜய் சங்கர் 43 ரன்னில் ரன் அவுட்டானார். அவருக்கு, ரவிச்சந்திரன் அஷ்வின் ஒத்துழைப்பு கொடுத்தார். கடைசி பந்தில், வெற்றிக்கு 3 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், தமிழக அணி ஒரு ரன் மட்டுமே எடுத்தது. இதன் மூலம், ஒரு ரன் வித்தியாசத்தில் கர்நாடக அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. கடந்த ஆண்டும் கர்நாடக அணியே சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி இருந்தது குறிப்பிடத்தக்கது.