தென்னிந்திய அளவிலான ரோலர் ஹாக்கி போட்டி : தனியார் பள்ளி மாணவிகள் முதலிடம் பிடித்து சாதனை
Dec 4 2019 10:32AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தென்னிந்திய அளவிலான ரோலர் ஹாக்கி போட்டியில் கும்பகோணத்தைச் சேர்ந்த தனியார் பள்ளி மாணவிகள் முதலிடத்திலும், மாணவர்கள் 3-ம் இடத்தையும் பிடித்தனர்.
தமிழகம், புதுச்சேரி ரோலர் ஹாக்கி கழகம் சார்பில் திருச்சியில் மாநில அளவிலான ரோலர் ஹாக்கி சாம்பியன் போட்டி நடைபெற்றது. மாணவ- மாணவிகளுக்கு தனித்தனிப் பிரிவாக வயது அடிப்படையில் போட்டிகள் நடத்தப்பட்டன.
தமிழகம், ஆந்திரா, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் பங்கேற்றனர். கும்பகோணம் தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவிகள் முதலிடத்தையும், அதே பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் 3-ம் இடத்தையும் பிடித்தனர். அவர்களுக்கு பள்ளி தாளாளர் கார்த்திகேயன் பதக்ககங்கள் அணிவித்து, சான்றிதழ் வழங்கி பாராட்டினார். வெற்றி பெற்ற மாணவ- மாணவிகள் அடுத்த மாதம் சிம்லாவில் 12, 13 மற்றும் 14ம் தேதிகளில் நடைபெறும் தேசிய அளவிலான ரோலர் ஹாக்கி போட்டிகளில் பங்கேற்க உள்ளனர்.