2020 ஒலிம்பிக்கில் ரஷ்யா பங்கேற்க தடை - ஊக்க மருந்து சர்ச்சையில் சிக்கியதால் 2022 பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக்சில் பங்கேற்கவும் தடை விதிப்பு
Dec 9 2019 5:38PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஊக்க மருந்து பரிசோதனைக்கு தவறான தகவல்களை அளித்ததால், அடுத்த 4 நான்கு ஆண்டுகளுக்கு ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க ரஷ்யாவிற்கு தடை விதித்து சர்வதேச ஊக்கமருந்து தடுப்பு அமைப்பு நடவடிக்கை எடுத்துள்ளது.
ஸ்விட்சர்லாந்தின் லசேன் நகரில், சர்வதேச ஊக்கமருந்து தடுப்பு அமைப்பின் நிர்வாகக்குழு கூட்டம் நடைபெற்றது. ஊக்கமருந்து சோதனைக்காக, ரஷ்யா தவறான தகவல்களை அளித்த புகார் குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த சர்வதேச ஊக்கமருந்து தடுப்பு அமைப்பின் செய்தித் தொடர்பாளர், ரஷ்யா தவறான தகவல்களை தந்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், இதனைத் தொடர்ந்து, ஆய்வகத்திலிருந்து அளித்த பரிந்துரைகளை ஏற்று, டோக்கியோவில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளிலும், 2022-ம் ஆண்டு பெய்ஜிங்கில் நடைபெறவுள்ள குளிர்கால ஒலிம்பிக்கிலும் பங்கேற்க ரஷ்யாவிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.