சென்னை வந்தடைந்த இந்திய-வெஸ்ட் இன்டீஸ் அணி வீரர்கள் : வரும் 15-ம் தேதி இரு அணிகளுக்கிடையேயான போட்டி
Dec 12 2019 9:55PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் இந்திய-வெஸ்ட் இன்டீஸ் அணி வீரர்கள், இன்று சென்னை வந்தடைந்தனர். இரு அணிகளுக்கிடையேயான போட்டி, வரும் 15-ம் தேதி நடைபெற உள்ளது.
இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இன்டீஸ் அணி, 3 டி20 போட்டி மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. டி20 தொடரை இந்தியா வென்றுள்ள நிலையில், ஒருநாள் போட்டித் தொடர், வரும் 15-ம் தேதி தொடங்குகிறது. சென்னையில் நடைபெற உள்ள முதல் ஒருநாள் போட்டியில் பங்கேற்பதற்காக, விராட் கோலி தலைமையிலான இந்திய அணியினரும், Polloard தலைமையிலான வெஸ்ட் இன்டீஸ் அணியினரும், இன்று சென்னை வந்து சேர்ந்தனர். டி20 தொடரை வென்ற இந்திய அணி, ஒருநாள் போட்டியையும் கைப்பற்றும் நோக்கில் களம் காண உள்ளது. டி20 தொடரை இழந்த வெஸ்ட் இன்டீஸ், இந்தியாவுக்கு பதிலடி கொடுக்கும் முனைப்போடு களம் காண உள்ளது.