செஸ் விளையாட்டில் 5 முறை சாம்பியன் பட்டம் வென்ற விஸ்வநாதன் ஆனந்தின் "மைண்ட் மாஸ்டர்" நூல் வெளியீடு
Dec 14 2019 11:34AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
செஸ் விளையாட்டில் 5 முறை சாம்பியன் பட்டம் வென்ற திரு. விஸ்வநாதன் ஆனந்த், தான் பெற்ற அனுபவங்களை "மைண்ட் மாஸ்டர்" என்ற நூலாக தொகுத்து வெளியிட்டுள்ளார். இந்த நூல் வெளியீட்டு விழா, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்றது. விழாவில் பேசிய விஸ்வநாதன் ஆனந்த், 2 வருட கடின உழைப்பில் இந்த நூல் உருவாக்கப்பட்டதாகவும், தனது அனுபவம் மிகவும் சுவாரஸ்யமானதொரு பயணம் என்றும் குறிப்பிட்டார். ரஷ்யாவைச் சேர்ந்த கார்ல்சன், இளம் வயது முதலே தனது உதவியாளராக இருந்ததால், தன்னுடைய நுணுக்கங்களை அறிந்து, தனக்கெதிராக நன்றாக விளையாடுவதாகவும், விஸ்வநாதன் ஆனந்த் தெரிவித்தார்.