இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 கிரிக்கெட் போட்டி : இந்தூரில் இன்று நடைபெறுகிறது
Jan 7 2020 12:09PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 கிரிக்கெட் போட்டி இந்தூரில் இன்று நடைபெறுகிறது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி, டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. அசாம் மாநிலம் கவுஹாத்தியில் நடைபெறவிருந்த முதல் டி20 போட்டி, மழை காரணமாக கைவிடப்பட்டது. இந்நிலையில், 2வது போட்டி, மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூரில், இன்று இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது. ரோஹித் ஷர்மாவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ள நிலையில், ஜஸ்பிரீத் பும்ரா அணிக்கு திரும்பியிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. முதல் போட்டி நடைபெறாததால் ஏமாற்றமடைந்த ரசிகர்கள், இன்றைய போட்டியை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளனர்.