இலங்கை அணிக்கு எதிராக புனேயில் இன்று கடைசி இருபது ஓவர் கிரிக்கெட் போட்டி : தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா களமிறங்குகிறது
Jan 10 2020 8:08AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான 3வது மற்றும் இருபது ஓவர் கிரிக்கெட் போட்டி, புனேவில் இன்று நடக்கிறது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி, டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. அசாம் மாநிலம் கவுஹாத்தியில் நடைபெறவிருந்த முதல் டி20 போட்டி, மழை காரணமாக கைவிடப்பட்டது. மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூரில் நடைபெற்ற 2-வது போட்டியில், இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில், 3-வது மற்றும் கடைசி இருபது ஓவர் கிரிக்கெட் போட்டி, புனேவில் இன்று இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது. இப்போட்டியில் கோப்பையை வெல்லும் முனைப்புடன் இந்திய அணி களமிறங்குகிறது. இதேபோல், தொடரை சமன் செய்யும் நோக்கில், இலங்கை அணி போராடும் என எதிர்பார்க்கப்படுகிறது.