இலங்கைக்கு எதிரான கடைசி டி-20 கிரிக்கெட் போட்டியில் 78 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி : 2க்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றி அசத்தல்
Jan 11 2020 5:05PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இலங்கைக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி டி-20 கிரிக்கெட் போட்டியில் 78 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி, 2க்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில், தொடரையும் கைப்பற்றியது.
இலங்கை மற்றும் இந்திய அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டி-20 கிரிக்கெட் போட்டி, புனேயில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற இலங்கை அணி, பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, தொடக்க ஆட்டக்காரர்களாக கே.எல்.ராகுல் மற்றும் ஷிகர் தவான் களமிறங்கினர். அணியின் ஸ்கோர் 10.5 ஓவரில் 97 ரன்னாக இருக்கும்போது, தவான் 36 பந்தில் 52 ரன்களில் ஆட்டமிழந்தார். கே.எல். ராகுல் 36 பந்தில் 54 ரன்கள் சேர்த்தார். விராட் கோலி, 17 பந்தில் 26 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். 7-வது விக்கெட்டுக்கு மணிஷ் பாண்டே உடன் ஜோடி சேர்ந்த ஷர்துல் தாகூர், அதிரடியாக விளையாடினார். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் இந்திய அணி, 6 விக்கெட் இழப்பிற்கு, 201 ரன்கள் குவித்தது.
202 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஆடிய இலங்கை அணி, 15.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 123 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதனால் இந்திய அணி 78 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றதுடன், தொடரையும் 2க்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் கைப்பற்றியது.