அசாமில் வில்வித்தை வீராங்கனையின் கழுத்தில் பாய்ந்த அம்பு : டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை
Jan 11 2020 12:46PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அசாமில் நடைபெற்று வரும் "கேலோ இந்தியா" போட்டியில், வில்வித்தை பயிற்சியின்போது காயமடைந்த வீராங்கனை ஷிவாங்கினி கோஹெய்னுக்கு, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அசாமில் நேற்று தொடங்கிய 3-வது கேலோ இந்தியா யூத் விளையாட்டுப் போட்டியில் பங்கேற்கவிருந்த வில்வித்தை வீராங்கனையான ஷிவாங்கினி கோஹெய்ன், பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது, தவறுதலாக கழுத்தில் அம்பு பாய்ந்து படுகாயம் அடைந்தார். விமானம் மூலம் டெல்லி கொண்டு வரப்பட்ட ஷிவாங்கினிக்கு, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தீவிர சிகிச்சை பிரிவில் மாற்றப்பட்டுள்ள ஷிவாங்கினிக்கு, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.