திண்டுக்கல்லில் மாநில அளவிலான மின்னொளி ஐவர் கால்பந்து போட்டி துவங்கியது
Jan 11 2020 12:49PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திண்டுக்கல்லில், மாநில அளவிலான, மின்னொளி ஐவர் கால்பந்து போட்டி, நேற்று துவங்கியது. கேஎப்சி கால்பந்தாட்டக் கழகம் சார்பில், மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடத்தப்படும் இப்போட்டி, 3 நாட்கள் நடைபெற உள்ளது. இதில், திண்டுக்கல், மதுரை, கோவை உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து 50க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்கின்றன. லீக் முறையில் நாள்தோறும் 10 போட்டிகள் நடைபெற உள்ளன. நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் வெற்று பெறும் அணிக்கு, வெற்றிக் கோப்பையும், ரொக்கப் பரிசும் வழங்கப்படும்.