பெருவில் உலகின் மிகப்பெரிய சாக்லேட் தயாரிக்கப்பட்டு கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தது
Oct 16 2017 3:57PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பெரு நாட்டில், உலகின் மிகப்பெரிய சாக்லேட் தயாரிக்கப்பட்டு கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது.
பெரு தலைநகர் லிமாவில் நடைபெற்ற விழா ஒன்றில், 21 சதுரமீட்டர் அளவில் தயாரிக்கப்பட்ட பிரம்மாண்ட கருப்பு சாக்லேட் கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளது. 5 சென்டி மீட்டர் தடிமன் கொண்ட இந்த சாக்லேட்டில், 70 சதவீதம் சுத்தமான, கொக்கோ பயன்படுத்தப்பட்டுள்ளது.
பெரு நாட்டின் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த சமையல் கலைஞர்கள் ஒன்று திரண்டு, 8 மணி நேரத்தில் இந்த பிரம்மாண்ட சாக்லேட்டை உருவாக்கி அசத்தியுள்ளனர்.
கின்னஸ் உலக சாதனைக்காக தயாரிக்கப்பட்ட இந்த சாக்லேட்டில் மொத்தம், ஒரு டன் கோக்கோவும், 20 கிலோ செஸ்ட்நட்ஸ் மற்றும் அக்ரூட் பருப்புகள் சேர்க்கப்பட்டடுள்ளன. உலக அளவில் இது போன்ற சாக்லேட்கள் தயாரிக்கப்பட்டு வந்தாலும், இந்த அளவுக்கு கொக்கோ கலக்கப்பட்டுள்ளது, இந்த சாக்லேட்டின் சிறப்பாக கூறப்படுகிறது.
விழா முடிவடைந்த பிறகு, குழந்தைகள் மற்றும் பங்கேற்பாளர்களுக்கு பிரம்மாண்ட சாக்லேட், பகிர்ந்தளிக்கப்பட்டது.