அரசு ஊழியர்களாக அறிவிக்க வலியுறுத்தி கர்நாடக அரசுப் போக்குவரத்து ஊழியர்கள் உண்ணாவிரதப் போராட்டம் - பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
Feb 20 2020 1:21PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கர்நாடகா போக்குவரத்து ஊழியர்கள் தங்களை அரசு ஊழியர்களாக மாற்ற வலியுறுத்தி, உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
கர்நாடக அரசு நடத்தி வரும் பேருந்து கழகங்களில் பணியாற்றுபவர்களுக்கு அரசு ஊழியர்களுக்கு உண்டான அந்தஸ்து வழங்கப்படுவதில்லை. எனவே, அரசு போக்குவரத்து கழகங்களில் பணியாற்றி வரும் ஓட்டுநர்கள், நடத்துனர்கள் உள்ளிட்டோர் தங்களை அரசு ஊழியர்களாக மாற்ற வேண்டும் என நீண்ட நாட்களாக வலியுறுத்தி வருகின்றனர். இக்கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் இன்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.