இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில், 22 ஆயிரத்து 252 பேருக்கு கொரோனா பாதிப்பு - 467 பேர் உயிரிழந்த சோகம்
Jul 7 2020 12:04PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில், 22 ஆயிரத்து 252 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 467 பேர் உயிரிழந்துள்ளனர்.
நாடு முழுவதும் பல்வேறு தளர்வுகளுடன் பொது முடக்கம் வரும் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை தினந்தோறும் அதிரடி உயர்வை கண்டு வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில், 22 ஆயிரத்து 252 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து, நாடு முழுவதும் கொரோனா மொத்த பாதிப்பு, 7 லட்சத்து 19 ஆயிரத்து 665-ஆக உயர்ந்துள்ளது. இதில், 2 லட்சத்து 59 ஆயிரத்து 557 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும், 4 லட்சத்து 39 ஆயிரத்து 948 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழப்பை பொறுத்தவரை கடந்த 24 மணி நேரத்தில் 467 பேர் உயிரிழந்துள்ளதாகவும், மொத்த பலி எண்ணிக்கை 20 ஆயிரத்து 160-ஆக அதிகரித்துள்ளதாகவும், மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.