மெஹபூபாவை அரசியல் நடவடிக்கையில் ஈடுபட அனுமதிக்க வேண்டும் : உச்ச நீதிமன்றத்தில் மகள் இல்திஜா முப்தி வழக்கு

Sep 24 2020 10:36AM
எழுத்தின் அளவு: அ + அ -

ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் மெஹபூபா, அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதை மத்திய அரசு தடுத்து வருவதாக அவரது மகள், இல்திஜா முப்தி, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து, கடந்தாண்டு, ஆகஸ்ட் மாதம் 5-ம் தேதி நீக்‍கப்பட்டது. இதனை தொடர்ந்து வீட்டு சிறையில் வைக்கப்பட்டிருந்த ஜம்மு காஷ்மீரின் முன்னணி தலைவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். ஆனால், மெஹபூபா மீதான வழக்கு தொடர்ந்து நீடிப்பதால், அவர் வீட்டுக்‍ காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், அவருடைய மகள் இல்திஜா முப்தி உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். ஜம்மு - காஷ்மீரின் முதல்வராக இருந்துள்ள மெஹபூபா முப்தி, மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவராகவும் உள்ளார் என குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில், அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தடுக்கும் வகையில், அவரை தொடர்ந்து காவலில் வைத்துள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார். ஒரு முக்கியமான எதிர்க்கட்சித் தலைவரை, விசாரணை ஏதும் இல்லாமல், ஓராண்டுக்கு மேலாக தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து அடைத்து வைத்துள்ளதாக அவர் விமர்சித்துள்ளார். எனவே அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்ள மெஹபூபாவுக்கு அனுமதி வழங்கி உத்தரவிட வேண்டும் என அவரது மகள் இல்திஜா முப்தி, உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00