குடியரசு தினத்தன்று டெல்லியில் டிராக்டர் பேரணி : 1 லட்சத்திற்கும் மேற்பட்ட டிராக்டர்கள் பங்கேற்கவுள்ளன

Jan 17 2021 5:50PM
எழுத்தின் அளவு: அ + அ -

குடியரசு தினத்தன்று டெல்லியில் நடைபெறவுள்ள டிராக்டர் பேரணியில், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட டிராக்டர்கள் பங்கேற்கவுள்ளதாக விவசாய சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக்கோரி, பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான விவசாயிகள், டெல்லி எல்லையில் தொடர்ந்து 54-வது நாளாக இன்றும் போராடி வருகின்றனர். விவசாயிகளுடன் மத்திய அரசு நடத்திய 9 கட்ட பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் முடிந்துள்ளன. பேச்சுவார்த்தைக்காக உசச்நீதிமன்றம் அமைத்துள்ள குழுவுடன், பேச்சுவார்த்தை நடத்த தயாராக இல்லை என விவசாயிகள் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டனர். இந்த நிலையில், மத்திய அரசின் கடும் எதிர்ப்பை மீறி, குடியரசு தினத்தன்று டெல்லியில் டிராக்டர் பேரணி நடத்த விவசாயிகள் திட்டமிட்டுள்ளனர். இந்த பேரணியில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட டிராக்டர்கள் கலந்துகொள்ளவிருப்பதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். இந்த டிராக்டர் பேணியில் பங்கேற்பதற்காக, பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் இருந்து, ஆயிரக்கணக்கான விவசாயிகள் டிராக்டரில் டெல்லி நோக்கி சென்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00