நடப்பு ஆண்டுக்கான பத்ம விருதுகள் - முதல் கட்டமாக 56 பேருக்கு குடியரசுத் தலைவர் வழங்கினார்
Mar 11 2019 5:09PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நடப்பு ஆண்டுக்கான பத்ம விருதுகளை, குடியரசுத் தலைவர் திரு. ராம்நாத் கோவிந்த் வழங்கினார்.
பல்வேறு துறைகளில் சாதனை படைப்போருக்கு ஆண்டுதோறும் பத்ம விருதுகள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான விருது பெறுவோரின் பட்டியல், கடந்த ஜனவரி மாதம் வெளியிடப்பட்டது. இதில் பத்மஸ்ரீ, பத்மபூஷண், பத்மவிபூஷண் என, மொத்தம் 112 பேருக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டன. இவர்களில் முதல் கட்டமாக 56 பேருக்கு இன்று விருது வழங்கப்பட்டது.
குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில், குடியரசுத் தலைவர் திரு.ராம்நாத் கோவிந்த், மலையாள நடிகர் மோகன்லால், இயக்குநர் பிரபுதேவா, ஆன்மிகத் தலைவர் பங்காரு அடிகளார், சமூக சேவகர் மதுரை சின்னப்பிள்ளை, டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமல், மற்றும் டெல்லி முன்னாள் முதலமைச்சர் ஷீலா தீட்சித் உள்ளிட்டோருக்கு விருதுகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் குடியரசு துணைத் தலைவர் திரு. வெங்கையா நாயுடு, பிரதமர் திரு. நரேந்திர மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் பங்கேற்றனர்.