தூத்துக்குடியில் மாநில அளவிலான சிலம்ப போட்டி : 5 வயது சிறுவன் தங்கப்பதக்கம் வென்று சாதனை
Jan 29 2021 12:08PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்தில் நடைபெற்ற மாநில அளவிலான சிலம்பு போட்டியில் 5 வயது சிறுவன் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் வென்று சாதனைப் படைத்துள்ளார்.
நாசரேத்தில் மாநில அளவிலான சிலம்பம் போட்டி நடைபெற்றது. இதில், ஐந்து வயது உட்பட்டோருக்கான பிரிவில், தூத்துக்குடியைச் சேர்ந்த சிறுவன் சந்தோஷ் குருநாதன் பங்கேற்று முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். இதே போல் தூத்துக்குடியைச் சேர்ந்த மாணவன் கணேஷ் குமார் 17 வயதுக்கு உட்பட்டோருக்கான மாநில அளவிலான கராத்தே போட்டியில் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் பெற்றுள்ளார்.