கண்களைக் கட்டியவாறு சைக்கிள் ஓட்டியும், செஸ் விளையாடியும் உலக சாதனை படைத்த பள்ளி மாணவி
Oct 20 2021 12:01PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கரூர் மாணவி ஒருவர் கண்களைக் கட்டியவாறு சைக்கிள் ஓட்டியும், செஸ் விளையாடியும் உலக சாதனை படைத்துள்ளார்.
கரூரைச் சேர்ந்த சீனிவாசன் - வாசவி தம்பதியினரின் மகளான யோகலட்சுமி, மூளையின் திறன்களை ஒருமுகப்படுத்தி, கண்களைத் திறந்து கொண்டு செய்யும் அத்தனை செயல்களையும் கண்களை மூடிக்கொண்டு செய்வதற்கான பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார். தான் கற்ற பயிற்சி முலம், கண்களை கட்டியவாறு அவர் சைக்கிளை லாவகமாக ஓட்டுகிறார். ரூபாய் நோட்டுகளின் மதிப்பு உள்ளிட்ட விபரங்களையும் கூறி அசத்தினார். சாதனை புத்தக நடுவர்கள் முன்னிலையில், இதேபோல் பல்வேறு சாதனைகளை மாணவி யோகலட்சுமி நிகழ்த்தி காட்டினார்.