நாகை, கடலூர் மாவட்டங்களில் ஈ.பி.எஸ் மற்றும் ஒ.பி.எஸ் அணியிலிருந்து விலகி ஏராளமானோர் கழகத்தில் இணைந்தனர்

Nov 21 2017 12:11PM
எழுத்தின் அளவு: அ + அ -

நாகை, கடலூர் மாவட்டங்களில் ஈ.பி.எஸ் மற்றும் ஒ.பி.எஸ் அணியிலிருந்து விலகிய ஏராளமானோர், கழக பொதுச் செயலாளர் தியாகத்தலைவி சின்னம்மா தலைமையில் கழக துணைப்பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் வழிகாட்டுதலில் சிறப்பாக செயல்பட்டு வரும் கழகத்தில், தங்களை இணைத்துக் கொண்டனர்.

பழனிச்சாமி அணியினரின் நிர்வாக சீர்கேடு மற்றும் மக்கள் விரோத செயல்பாடுகளுக்கு, தமிழகத்தின் முழுவதும் பொதுமக்கள் மத்தியில் கண்டனம் வலுத்து வருகிறது. இதனால் அந்த அணியைச் சேர்ந்த ஏராளமானோர் அதிருப்தியில் உள்ளனர்.

இந்நிலையில், நாகை தெற்கு மாவட்டம் தலைஞாயிறு ஒன்றியம் பாங்கல் ஊராட்சியை சேர்ந்த மாற்றுக்கட்சியினர் 300-க்கும் மேற்பட்டோர் நாகை தெற்கு மாவட்டக் கழக செயலாளர் திரு. ஆர்.சந்திரமோகன் முன்னிலையில் கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

இதேபோல், கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் திரு.வி.டி. கலைச்செல்வன் தலைமையில், கடலூர் நகர செயலாளர் திரு. சி.கே.எஸ். கார்த்திகேயன் முன்னிலையில், மாற்றுக்கட்சியினர் ஏராளமானோர் தங்களை கழகத்தில் இணைத்துக் கொண்டனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00