சென்னையில் புத்தக கண்காட்சி : அனைத்து விதமான புத்தகங்களும் ஒரே இடத்தில் கிடைப்பதால் மாணவர்கள், பெற்றோர் மிகுந்த மகிழ்ச்சி

Jan 17 2019 12:40PM
எழுத்தின் அளவு: அ + அ -

சென்னையில் நடைபெறும் புத்தக கண்காட்சியில் அனைத்து விதமான புத்தகங்களும் ஒரே இடத்தில் கிடைப்பதால் மாணவர்கள், பெற்றோர் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் கடந்த 4 ஆம் தேதியிலிருந்து புத்தக கண்காட்சி நடைபெற்று வருகிறது. வரும் 20-ம் தேதி வரை நடைபெற உள்ள புத்தக கண்காட்சியை வாசகர்கள் பெரிதும் பயன்படுத்தி வருகின்றனர். பொங்கல் விடுமுறை நாள் என்பதால் கூட்டம் அதிகரித்துள்ளது. பொது அறிவு, ஒவியம் என அனைத்து விதமான புத்தகங்களும் ஒரே இடத்தில் கிடைப்பதால் பெற்றோருடன் வந்து தங்களுக்கு பிடித்த புத்தங்களை வாங்கி செல்வதாக சிறுவர்கள் தெரிவிக்கின்றனர்.

குழந்தைகளை வளர்க்கும் முறைகள் குறித்த புத்தகம் அதிகம் விற்பனையாவதாகவும், கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு விற்பனை இரட்டிப்பாக உள்ளதாகவும் அரங்க உரிமையாளர் மந்திர மூர்த்தி தெரிவித்தார்.

புத்தக கண்காட்சிக்கு இதுவரை 11 லட்சம் வாசகர்கள் வருகை புரிந்துள்ளதாகவும், இந்த ஆண்டு வாசகர்களின் வருகை 20 லட்சத்தை தாண்டும் என எதிர்பார்ப்பதாகவும், தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்க தலைவர் திரு.வைரவன் தெரிவித்தார்.

வரும் 20-ம் தேதி வரை புத்தக கண்காட்சி நடைபெறவுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00