தமிழகம் முழுவதும் எம்.ஜி.ஆர். 102-வது பிறந்த நாள் கொண்டாட்டம் : கழகத்தினர் மலர்தூவி மரியாதை - இனிப்புகள் வழங்கி உற்சாகம்

Jan 17 2019 3:16PM
எழுத்தின் அளவு: அ + அ -

தமிழகம் முழுவதும் புரட்சித் தலைவர் டாக்‍டர் எம்.ஜி.ஆரின் 102-வது பிறந்த நாள் விழாவை, அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழகத்தினர் மற்றும் பொதுமக்‍கள் உற்சாகமாகக்‍ கொண்டாடி வருகின்றனர். திருவுருவச் சிலைக்‍கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

காஞ்சிபுரம் நகர கழக செயலாளர் திரு. மனோகரன் தலைமையில், காஞ்சிபுரம் பிள்ளையார் பகுதியில் டாக்டர் புரட்சித் தலைவர் எம்ஜிஆரின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து கழகத்தினர் மரியாதை செலுத்தினர். இதனைத் தொடர்ந்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.

காஞ்சிபுரம் நகர கழக செயலாளர் கிருஷ்ண மூர்த்தி தலைமையில், காஞ்சி கிழக்கு மாவட்ட கழகச் செயலாளர் திரு.ம. கரிகாலன் உள்ளிட்ட கழகத்தினர், தாம்பரத்தில் உள்ள முத்து ரங்கம் பூங்காவில் உள்ள எம் ஜிஆரின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.

திருச்சி வடக்‍கு மாவட்டக்‍ கழகம் சார்பில், ஸ்ரீரங்கம் தொகுதிக்‍குட்பட்ட மேலூரில் உள்ள எம்.ஜி.ஆரின் திருவுருவச் சிலைக்‍கு கழக அமைப்புச் செயலாளரும், வடக்‍கு மாவட்டக்‍ கழகச் செயலாளருமான ஆர். மனோகரன் தலைமையில் கழகத்தினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பொதுமக்‍களுக்‍கு இனிப்புகள் வழங்கப்பட்டன.

திருவள்ளூர் மேற்கு மாவட்டக்‍ கழகம் சார்பில், திருவள்ளூரில் எம்.ஜி.ஆரின் திருவுருவச் சிலைக்‍கு, திருவள்ளூர் மேற்கு மாவட்டக்‍ கழகச் செயலாளர் திரு. டி.ஏ. ஏழுமலை உள்ளிட்ட கழக நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். கழகக்‍ கொடியேற்றி பட்டாசுகள் வெடித்தும் கூடியிருந்தோருக்‍கு இனிப்புகள் வழங்கியும் எம்.ஜி.ஆர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

திருவள்ளூர் மத்திய மாவட்டக்‍ கழகம் சார்பில் வளசரவாக்‍கத்தில் உள்ள எம்.ஜி.ஆரின் திருவுருவச் சிலைக்‍கு, திருவள்ளூர் மத்திய மாவட்டக்‍ கழகச் செயலாளர் லக்‍கி முருகன் தலைமையில் கழக நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பட்டாசுகள் வெடித்து இனிப்புகள் வழங்கப்பட்டது.

திருவள்ளூர் கிழக்‍கு மாவட்டக்‍ கழகம் சார்பில், திருவொற்றியூரில் உள்ள எம்.ஜி.ஆரின் திருவுருவச் சிலைக்‍கு, மாவட்டக்‍ கழகச் செயலாளர் திரு. எஸ்.எம். சீனிவாசன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பொன்னேரியில் உள்ள எம்.ஜி.ஆரின் திருவுருவச் சிலைக்‍கு கழக மாணவரணிச் செயலாளர் திரு. பொன் ராஜா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

புரட்சி தலைவர் டாக்‍டர் எம்.ஜி.ஆரின் 102-வது பிறந்தநாளையொட்டி, கழக அமைப்பு செயலாளர் திரு.திருவேற்காடு பா.சீனிவாசன் தலைமையில் கழகத்தினர், திருவேற்காடு, ஆவடி மற்றும் திருநின்றவூர் ஆகிய இடங்களில், திருவுருவசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அன்னதானம் மற்றும் இனிப்புகளும் வழங்கப்பட்டன. இதில் கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த செம்பிய மணக்குடி மற்றும் ஆறுகாட்டுத் துறை மீனவ கிராமத்தில் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்ட டாக்‍டர் எம்ஜிஆரின் திருவுருவப்படத்திற்கு, அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் மலர்தூவி மரியாதை செலுத்தினர். மாவட்ட அவைத்தலைவர் திரு. ஆறுமுகம் உள்ளிட்ட கழகத்தினர் கலந்துகொண்டர்.

நெல்லை மாநகர் மாவட்டக்‍ கழகம் சார்பில், பாளையங் கோட்டை கொக்‍கிர குளத்தில் உள்ள எம்.ஜி.ஆர் சிலைக்‍கு மாநகர் மாவட்டக் கழகச் செயலாளர் கல்லூரி வேலாயுதம் தலைமையில் கழகத்தினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இதேபோல், நெல்லை சந்திப்பு சிந்து பூந்துறை பகுதியில் அலங்கரித்து வைக்‍கப்பட்டிருந்த எம்.ஜி.ஆரின் திருவுருவப் படத்திற்கும் மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

திருப்பூர் புறநகர் மாவட்ட கழகம் சார்பில் மடத்துக்குளம் அருகே கிருஷ்ணபுரத்தில் புரட்சிதலைவர் எம்.ஜி.ஆரின் முழு உருவ சிலைக்கு மாவட்ட கழக செயலாளர் திரு. சி.சண்முகவேலு தலைமையில், கழகத்தினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து பொதுமக்களுக்கு வெண்பொங்கல, இனிப்புகள் வழங்கப்பட்டன.

இதேபோல் திருப்பூர் புறநகர் மாவட்டம், தாராபுரம் புதிய பேருந்து நிலையம் எதிரே மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வைத்திருந்த எம்.ஜி.ஆர். திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து, மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. கழக நிர்வாகிகள் தொண்டர்கள் பொதுமக்கள் பெரும் திரளாக பங்கேற்றனர்.

திருப்பூர் மாநகர் மாவட்ட கழகம் சார்பில் குமரானந்தபுரம் தலைமை அலுவலகத்தில், எம்.​ஜி.ஆரின் திருஉருவ படத்திற்கு மாவட்ட கழக செயலாளர் சி.சிவசாமி தலைமையில், கழகத்தினர் மாலை அணிவித்து மலர்கள் தூவி மரியாதை செலுத்தினர். பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. கழக நிர்வாகிகள் ஏராளமானவர்கள் பங்கேற்றனர்.

எம்.ஜி.ஆரின் 102 வது பிறந்தநாளையொட்டிதூத்துக்குடி தெற்கு மாவட்ட கழகம் சார்பில், பழய மாநகராட்சி வளாகத்தில் உள்ல அவரது திருஉருவச் சிலைக்கு, மாவட்ட செயலாளர் திரு.ஹென்றிதாஸ் தலைமையில் கழகத்தினர் ஊர்வலமாக வந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகளூம் வழங்கினர்.

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட கழகம் மற்றும் மத்தூர் ஒன்றிய கழகம் சார்பாக மத்தூரில், கிழக்கு மாவட்ட கழக செயலாளர் திரு. கோ ரவிச்சந்திரன் தலைமையில் பேருந்து நிலையத்தில் உள்ள எம்.ஜி.ஆரின் திருவுருவ சிலைக்கும், திரு உருவ படத்திற்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இனிப்புகள் வழங்கி ஏழை ,எளியோர்களுக்கு இலவச வேஷ்டி சேலை வழங்கப்பட்டது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00