ஹெச்.ஐ.வி பாதிப்பு ரத்தம் ஏற்றப்பட்ட சாத்தூர் பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்தது - தாயும் சேயும் நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தகவல்
Jan 18 2019 3:06PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஹெச்.ஐ.வி பாதிப்பு ரத்தம் ஏற்றப்பட்ட சாத்தூர் பெண்ணுக்கு, பெண் குழந்தை பிறந்துள்ளது. தாயும் சேயும் நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூரை சேர்ந்த கர்ப்பிணிப் பெண்ணுக்கு இரத்த சிவப்பு அணுக்களின் எண்ணிக்கை குறைவாக இருந்ததாக கூறி, சிவகாசி அரசு மருத்துவமனையில் இருந்து ரத்தம் வரவழைக்கப்பட்டு ரத்தம் செலுத்தப்பட்டது. அவருக்கு, ராமநாதபுரம் கமுதியை சேர்ந்த ஹெச்ஐவி பாதித்த வாலிபரின் ரத்தம் செலுத்தப்பட்டது உறுதி செய்யப்பட்டது. இதனால் கர்ப்பிணி பெண் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு தனி அறையில் மருத்துவர்கள் கண்காணித்து வந்தனர். குழந்தைக்கு தொற்று ஏற்படாத வகையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில், நேற்றிரவு அந்தப் பெண்ணுக்கு சுகப்பிரசவம் ஏற்பட்டு பெண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு ஹெச்ஐவி தொற்று பரவாமல் இருக்க 45 நாட்கள் தொடர்ந்து தீவிர மருந்துகள் வழங்கப்படவுள்ளன. தாயும், சேயும் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
ஹெச்ஐவி ரத்தம் வழங்கிய இளைஞர் அண்மையில் விஷமருந்தி தற்கொலை செய்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.