புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் 102-வது பிறந்தநாள் விழா மற்றும் ஏழை-எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் பொதுக் கூட்டம் : அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் சார்பில் நாமக்கல் மாவட்டம் பரமத்தியில் வரும் 23-ம் தேதி நடைபெறும் என அறிவிப்பு

Jan 18 2019 3:17PM
எழுத்தின் அளவு: அ + அ -

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் 102-வது பிறந்தநாள் விழா மற்றும் ஏழை-எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் பொதுக் கூட்டம், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில், நாமக்கல் மாவட்டம் பரமத்தியில், வரும் 23-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அம்மா மக்கள் முன்னேற்றக் கழக தலைமைக் கழகம் இன்று வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பில், நாமக்கல் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்டக் கழகங்களின் சார்பில், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் 102-வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம், வரும் 19-ம் தேதியன்று, பரமத்தியில் நடைபெறும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், வழக்கம்போல், எடப்பாடி பழனிசாமி அரசின் காவல்துறை அனுமதி மறுத்த காரணத்தால், நீதிமன்றத்தில் அனுமதி பெறப்பட்டு, அதன்படி, வரும் 23-ம் தேதி மாலை 4 மணியளவில், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் 102-வது பிறந்த நாள் விழா மற்றும் ஏழை எளியோர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் பொதுக்கூட்டம், நாமக்கல் மாவட்டம் பரமத்தியில் நடைபெறவுள்ளதாக, தலைமைக்கழக அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது. இதில், கழக துணைப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் கலந்து கொண்டு, எழுச்சிப் பேருரையாற்றுகிறார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00