திருச்செந்தூரில் ஒரே நாளில் 4 வீடுகள், கடைகளில் மர்ம நபர்கள் கொள்ளை : மக்கள் அச்சம்
Feb 14 2019 3:20PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருச்செந்தூரில் ஒரே நாளில் 4 வீடுகள் மற்றும் கடைகளில் மர்ம நபர்கள் கொள்ளையடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள வீரபாண்டியபட்டினத்தினை சேர்ந்தவர் ராமநாதன். இவரது வீடு மற்றும் அருகில் உள்ள 4 வீடுகளில் நேற்று இரவு புகுந்த மர்ம நபர்கள் பீரோவினை உடைத்து திருட முயன்றுள்ளனர். அதில் பணம் இல்லாததால் விலை உயர்ந்த பொருட்கள் மற்றும் ஆடைகளை திருடி சென்றுள்ளனர். இதேபோல் திருச்செந்தூர் சாலையில் உள்ள ஒரு இரும்பு கடையின் கதவை உடைத்து உள்ளே சென்ற மர்மநபர்கள் அங்கிருந்த 30 ஆயிரம் ரூபாயைக் கொள்ளை அடித்தனர். இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே நாளில் அடுத்தடுத்து நடைபெற்ற இந்த கொள்ளை சம்பவங்கள் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.