கொடைக்கானலில் காதலர்களிடம் அதிக வரவேற்பு : கொய் மலர்கள் சாகுபடி குறைவால் விவசாயிகள் வருத்தம்
Feb 14 2019 5:26PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கொடைக்கானலில் காதலர்களிடம் அதிக வரவேற்பு பெற்ற கொய் மலர்களின் சாகுபடி குறைவால் விவசாயிகள் வருத்தம் அடைந்துள்ளனர்.
மலைகளின் இளவரசியான திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில், விவசாயத்திற்கு அடுத்தபடியாக கொய்மலர்களை விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனர். இந்த கொய்மலர்கள் கொடைக்கானல் மேல்மலை கிராமங்களான கவுஞ்சி, மன்னவனுர், கூக்கால், கிளாவரை, பண்ணைக்காடு, தாண்டிக்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதியில் பயிரிட்டு பசுமைக் குடில் அமைத்து பாதுகாப்பாக வளர்க்கப்படுகிறன.
இந்த வருடம் கால சீதோஷண நிலையின் காரணமாகவும் காஜா புயலால் செடிகள் சேதமடைந்ததால் கொய் மலர்களின் சாகுபடி குறைந்து காணப்படுகிறது. இதனால் இந்த கொய் மலர்களை பயிரிடும் விவசாயிகளுக்கு எந்தவித வருமானமும் பெரிதளவில் கிடைக்கவில்லை என விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.