உயரதிகாரிகள் அலுவலக அறைகளில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
Feb 18 2019 3:47PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு அதிகாரிகளின் அறைகளிலும் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்த வேண்டுமென தலைமைச் செயலருக்கு சென்னை உயர்நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது.
லஞ்ச ஒழிப்புத் துறை ஐஜி முருகன் மீது, அவருக்கு கீழ் பணிபுரிந்த பெண் எஸ்.பி ஒருவர் பாலியல் புகார் அளித்திருந்தார். இந்த புகாரில் பல மாதங்களாக காவல்துறை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால், பாதிக்கப்பட்ட பெண் போலீஸ், ஐஜி முருகனை பணிமாற்றம் செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், அரசு அலுவலகங்களில் நடக்கும் பாலியல் குற்றங்களை தடுக்க, காவல்துறை உள்பட அனைத்து அரசு அலுவலகங்களிலும் உள்ள அதிகாரிகளின் அறைகளில் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்த வேண்டிய கட்டாயம் உள்ளது என தெரிவித்தது. அதன்படி, அனைத்து அதிகாரிகள் அறைகளிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்த தலைமைச் செயளருக்கு சென்னை உயர்நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது. மேலும், பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளாகியிருக்கும் ஐ.ஜி. முருகன் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு அரசு தலைமைச் செயலாளருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.