தமிழகத்தில் வரும் நாட்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும் - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
Feb 14 2019 5:48PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழகத்தில் வரும் நாட்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் இப்போதே வெப்பத்தின் தாக்கம் உணரப்படும் நிலையில், நாளை முதல் அடுத்த இரு தினங்களுக்கு கடலோர மாவட்டங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குமரிக் கடல் பகுதியில் மணிக்கு 60 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசுவதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. வரும் நாட்களில் தமிழகத்தில் வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.