திண்டுக்கல்லில் வாரிசுகளுக்காக அமைச்சர்கள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் : தொண்டர்கள் புறக்கணித்ததால், வெறிச்சோடிய அரங்கம்
Feb 19 2019 11:37AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திண்டுக்கல்லில் வாரிசுகளுக்காக அமைச்சர்கள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டத்தை தொண்டர்கள் புறக்கணித்ததால், அரங்கத்தில் போடப்பட்ட சேர்கள் ஆட்கள் இன்றி வெறிச்சோடின.
திண்டுக்கல், தேனி மண்டல அம்மா பேரவை பாராளுமன்ற தேர்தல் குறித்து ஆலோசனை கூட்டம், திண்டுக்கல் நத்தம் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதை அமைச்சர்கள் திரு. ஆர்.பி.உதயகுமார், திரு.திண்டுக்கல் சீனிவாசன், முன்னாள் அமைச்சர் திரு.நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் கூட்டத்தில் கலந்துகொண்டு, வரும் தேர்தலில் வேட்பாளர்களை எவ்வாறு வெற்றிபெறச் செய்வது என்பது குறித்து ஆலோசனைகளை வழங்கினர். கூட்டம் துவங்கிய சில மணித்துளிகளிலேயே அழைத்து வரப்பட்ட நபர்கள், அரங்கத்தில் இருந்து வெளியேறினர். இதனால், ஆலோசனை கூட்டம் நடைபெற்ற அரங்கம் ஆட்கள் இல்லாமல் வெறிச்சோடியது. மேலும் தங்களின் வாரிசுகளை அரசியலில் தக்கவைக்க, இதுபோன்ற கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றது. மாண்புமிகு அம்மாவுக்கு பிறகு மூத்த உறுப்பினர்களுக்கு கட்சியில் அங்கீகாரம் இல்லை என்று கூட்டத்திலிருந்த இ.பி.எஸ் - ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் முணுமுணுத்தனர்.