அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில், பல்வேறு பகுதிகளில், கழக நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற்றன. இதில் ஏராளமான நிர்வாகிகள் கலந்துகொண்டு, கழகப் பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினர்.
கழக துணை பொது செயலாளர் திரு. டிடிவி தினகரன், கடலூர் கிழக்கு மாவட்டத்தில் வரும் 25-ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரை 5 சட்டமன்ற தொகுதிகளில் மக்கள் சந்திப்பு புரட்சிப்பயணம் மேற்கொள்ளவுள்ளார். இதுகுறித்து தொடர்பாக கடலூர் கிழக்கு மாவட்ட கழக விருதாச்சலம் நகரம் சார்பாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கடலூருக்கு வருகை தரும் திரு. டிடிவி தினகரனுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும் என்றும், திரளாக கழக நிர்வாகிகள் தொண்டர்கள் பொதுமக்கள் கூட வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது. இந்தக் கூட்டத்தில் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் திரு.வி.டி. கலைச்செல்வன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
கரூர் மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் புதிதாக நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் அறிமுகம் மற்றும் வீரர், வீராங்கனைகளுக்கு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மாவட்டக் கழகச் செயலாளர் திரு. பிஎஸ்எம் தங்கவேல் கலந்துகொண்டு, நாடாளுமன்றத் தேர்தலுக்கான பூத் கமிட்டி குறித்து நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார். முன்னதாக காஷ்மீரில் தீவிரவாதிகளால் குண்டுவெடிப்பில் 42 பேர் பலியானவர்களுக்கு 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர், புதிதாக அறிவிக்கப்பட்ட கழக நிர்வாகிகள், மாவட்ட செயலாளருக்கு மாலை அணிவித்து கௌரவித்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் நகர கழகம் சார்பில் பூத் கமிட்டி ஆலோசனை குழு கூட்டம் நடைபெற்றது. நாடாளுமன்றத் தேர்தலில் எவ்வாறு தேர்தல் பணியாற்றுவது, கழக வேட்பாளரை வெற்றி பெறச்செய்ய களப்பணியாற்றுவது மற்றும் மாண்புமிகு அம்மா அவர்களின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடுவது குறித்தும் இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டன. கழக நிர்வாகிகள் இதில் கலந்துகொண்டர்.
தூத்துக்குடி வடக்கு மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் ஆலோசனை கூட்டம், முப்பிளிபட்டியில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், மாண்புமிகு அம்மாவின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடுவது குறித்தும், தமிழக பட்ஜெட்டில் தூத்துக்குடி மாவட்டம் புற்ககணிக்கப்பட்டதற்கு கண்டனமும் தெரிவிக்கப்பட்டது. கழக அமைப்பு செயலாளர்கள் திரு. எஸ்.வி.பி.எஸ்.மாணிக்கராஜா, மாவட்டக் கழகச் செயலாளர் சுந்தர்ராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் தோவாளை ஒன்றியதிற்கு உட்பட்ட பூதபாண்டி அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில், சீதாபால் கிராமத்தைச் சேர்நத் ஏராளமான பெண்கள் மற்றும் மாற்றுக்கட்சிகளைச் சேர்ந்தவர்கள் கழகத்தில் தங்களை இணைத்துக்கொண்டனர். இந்த நிகழ்சியில் கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர் திரு. கே.டி. பச்சைமால், மாநில அம்மா பேரவை துணை செயலாளர் திரு. லட்சுமணன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
திண்டுக்கல் மாநகர மாவட்டக் கழகம் சார்பில் ஆலோசனைக் கூட்டம் மாநகர மாவட்ட செயலாளர் திரு. இராமு தேவர் தலைமையில் நடைபெற்றது. மாண்புமிகு அம்மாவின் பிறந்தநாளையொட்டி, ஏழை எளியோருக்கு உதவிகள் செய்து, அன்னதானம் வழங்கி சிறப்பாக கொண்டாடுவது என முடிவு செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் திண்டுக்கல் மாநகர மாவட்டக் கழக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
திருச்சி மாநகர் தர்மநாதபுரத்தில் உள்ள புனித செபஸ்தியார் ஆலயத்தின் 269-ம்ஆண்டுத் திருவிழாவையொட்டி, மாநகர் மாவட்ட கழகம் சார்பில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாநகர் மாவட்ட கழகச் செயலாளர் திரு. ஜெ.சீனிவாசன் கலந்துக்கொண்டு பொதுமக்களுக்கு அன்னதானத்தை தொடங்கிவைத்தார். ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அன்னதானத்தில் பங்கேற்று உணவருந்தி மகிழ்ந்தனர். இதில் கழக நிர்வாகிகள், பொதுமக்கள் பெரும் திரளாக பங்கேற்றனர்.
இதனிடையே, திண்டுக்கல் மாவட்டம் பழனியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் வரையப்பட்ட முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் சுவர் விளம்பரம் அரசு அலுவலர்கள் துணையுடன் ஆளும் கட்சியினர் அழித்ததால் கழகத்தினர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஆளும் தரப்பினரின் இந்த அராஜக நடவடிக்கைக்கு, தேர்தலில் மக்கள் முற்றுப்புள்ளி வைப்பார்கள் என கழகத்தினர் தெரிவித்தனர்.