கமல்ஹாசனின் அரசியல் அரைவேக்காட்டுத் தனத்தைப் பார்க்கும்போது, தலைமுடியைப் பிய்த்துக் கொண்டு, சட்டையைக் கிழித்துக் கொண்டு ஓடுவாரோ : தி.மு.க. அதிகாரப் பூர்வ நாளேடு விமர்சனம்
Feb 19 2019 3:58PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கமல்ஹாசனின் அரசியல் அரைவேக்காட்டுத் தனத்தைப் பார்க்கும்போது, தலைமுடியைப் பிய்த்துக் கொண்டு, சட்டையைக் கிழித்துக் கொண்டு ஓடுவாரோ என தோன்றுவதாக தி.மு.க. வின் அதிகாரப் பூர்வ நாளேடு விமர்சனம் செய்துள்ளது.
தன்னை பார்த்து கிராம சபை கூட்டம் நடத்தும் ஸ்டாலினுக்கு வெட்கமில்லையா? என மக்கள் நீதி மய்ய தலைவர் திரு. கமல்ஹாசன் விமர்சித்திருந்தார். மேலும், சட்டப்பேரவையில் சட்டைக் கிழிந்தால்கூட, நல்ல சட்டைப் போட்டுக்கொண்டு ஒழுக்கமாகதான் வெளியே வருவேன் என மு.க.ஸ்டாலினின் செயல்பாட்டையும் அவர் கேலி செய்திருந்தார்.
இதற்கு, தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ நாளிதழான முரசொலியில் ''கமலின் அரசியல் அரைவேக்காட்டுத்தனம்" என்ற தலைப்பில் கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது. வெட்கம் என்பதன் பொருள் அறியாது பல வெட்கங்கெட்ட செயல்களை வெளிப்படையாக செய்பவர் கமல்ஹாசன் என்றும், கிராம சபை கூட்டத்தை தி.மு.க. நடத்தியபோதெல்லாம், கமல்ஹாசன் ஏதாவது கதாநாகியுடன் டூயட் பாடி ஆடிக்கொண்டிருந்திருப்பார் என்றும் விமர்சித்துள்ளது. ''மூன்றாம் பிறை" திரைப்படத்தில் ரயில் நிலையத்தில், தலைமுடியைப் பிய்த்துக் கொண்டு, சட்டையைக் கிழித்துக் கொண்டு பிளாட் பாரத்தில் அங்குமிங்கும் ஓடுவாரே, அந்தக் காட்சி நிஜத்தில் நடந்துவிமோ என்று அஞ்சுவதாகவும் அந்நாளிதழ் தெரிவித்துள்ளது.