ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை வாபஸ் பெற வேண்டும்: ஆலை எதிர்ப்பாளர்கள் கோரிக்கை
Feb 22 2019 11:17AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
உச்சநீதிமன்றம் ஸ்டெர்லைட் ஆலைக்கு தடை விதித்து விட்டதால், ஆலைக்கு எதிராக போராடியவர்கள் மீது போடப்பட்ட வழக்கினை வாபஸ் பெற வேண்டும் என ஆலை எதிர்ப்பாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பாளரும், தமிழர் தேசிய கொற்றத்தின் தலைவருமான திரு. வியனரசு, தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையினை நிரந்தரமாக மூடிவிட்டு, அந்த இடத்தில் போராட்டத்தில் உயிரிழந்தவர்களுக்கு மணிமண்டபம் கட்ட வேண்டும் என தெரிவித்தார்.
இதனிடையே, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பான 8-ம் கட்ட விசாரணை நிறைவடைந்த நிலையில், இதுவரை மொத்தம் 193 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. 9-ம் கட்ட விசாரணை அடுத்த மாதம் 12-ம் தேதி தொடங்கவுள்ளது.