கஜா புயல் பாதிப்புகளை எடப்பாடி பழனிசாமி அரசு சரிசெய்யவில்லை என கமல்ஹாசன் குற்றச்சாட்டு : 2 ஆயிரம் ரூபாய் அறிவிப்பு ஏமாற்று வேலை என்றும் விமர்சனம்
Feb 22 2019 11:56AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கஜா புயல் தாக்கி 100 நாட்களை கடந்த போதிலும், பாதிப்புகளை இதுவரை எடப்பாடி பழனிசாமி அரசு சரிசெய்யவில்லை என மக்கள் நீதி மய்ய தலைவர் திரு.கமல்ஹாசன் குற்றம் சாட்டியுள்ளார்.
திருவாரூர் தெற்குவீதியில் அக்கட்சியின் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய கமல்ஹாசன், தேர்தலை முன்னிட்டு ஏழைக்குடும்பங்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவித்து எடப்பாடி பழனிசாமி அரசு ஏமாற்று வேலையில் ஈடுபட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டினார்.