திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த ஏராளமானோர் அக்கட்சிகளிலிருந்து விலகி கழகத்தில் இணைந்தனர்
Feb 25 2019 2:58PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியத்தை சேர்ந்த இ.பி.எஸ்-ஓ.பி.எஸ் அணி, பா.ம.க, தி.மு.க உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த ஏராளமானோர் அக்கட்சிகளிலிருந்து விலகி கழகத்தில் இணைந்தனர்.
திருவள்ளூர் மேற்கு மாவட்ட கழக அலுவலகத்தில் மாற்றுக்கட்சியினர் கழகத்தில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், கடம்பத்தூர் ஒன்றியத்தை சேர்ந்த, தி.மு.க, பா.ம.க மற்றும் இ.பி.எஸ்-ஓ.பி.எஸ் அணியைச் சேர்ந்த 150-க்கும் மேற்பட்டோர் அக்கட்சிகளிலிருந்து விலகி, திருவள்ளூர் மேற்கு மாவட்ட கழக செயலாளர் திரு. டி.எ.ஏழுமலை உள்ளிட்ட கழக நிர்வாகிகள் முன்னிலையில் கழகத்தில் இணைந்தனர். கடம்பத்தூர் ஒன்றிய செயலாளர் திரு. வினோத்குமார் உள்பட கழக நிர்வாகிகள் கழகத்தில் புதிதாக இணைந்தவர்களுக்கு சால்வை அணிவித்து வரவேற்றனர்.
இதனிடையே திருவள்ளூர் மத்திய மாவட்டக் கழகம் சார்பில், நாடாளுமன்ற தேர்தல் பணிகள் மற்றும் கழக வளர்ச்சி பணிகள் குறித்த நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட கழக செயலாளர் திரு. லக்கி முருகன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், வரும் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தகளில் அனைத்து தொகுதிகளிலும், பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் கழக வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்ய வேண்டிய களப்பணிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இதில், கழக செய்தி தொடர்பாளர் இளந்தமிழ் ஆர்வலன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.