குறிஞ்சிப்பாடி அருகே பட்டப்பகலில் பள்ளி ஆசிரியை படுகொலை செய்யப்பட்ட பரபரப்பு சம்பவம் - ஒருதலைக் காதல் விபரீதத்தால் இளைஞர் வெறிச்செயல்
Feb 22 2019 4:32PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி பகுதியில் பட்டப்பகலில் இளைஞர் ஒருவர் பள்ளிக்குள் புகுந்து ஆசிரியையை வெட்டிப் படுகொலை செய்த சம்பவம் அதிர்ச்சியையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
குறிஞ்சிப்பாடி பகுதியில் உள்ள ஸ்ரீ காயத்ரி மெட்ரிகுலேஷன் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார் ரம்யா. அவரை ராஜசேகர் என்ற இளைஞன் ஒருதலையாக காதலித்து வந்ததாகத் தெரிகிறது. இந்நிலையில், இன்று காலை அவர் பணிபுரியும் பள்ளிக்குள் திடீரென நுழைந்த ராஜசேகர், தான் வைத்திருந்த அரிவாளால் ரம்யாவை சரமாரியாகத் தாக்கினான். இந்தக் கொடூர சம்பவத்தில் ரம்யா அங்கேயே உயிரிழந்தார். சம்பவம் நடந்தபோது வகுப்பறையில் மாணவர்கள் யாரும் இல்லை என கூறப்படுகிறது. இந்தக் கொடூரச் செயலில் ஈடுபட்ட ராஜசேகர், உடனடியாக அங்கிருந்து தப்பிச் சென்றான். அவனைப் பிடிக்க குறிஞ்சிப்பாடி காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிகழ்வு அப்பகுதி மக்களிடையே கொந்தளிப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.