தமிழகத்தில் தேர்தல் தொடர்பான நிகழ்வுகள் தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைமையிலேயே நடைபெற வேண்டும் - ஓ.பன்னீர்செல்வத்திடம் பாஜக தலைவர் அமித் ஷா நிபந்தனை
Feb 25 2019 3:36PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழகத்தில் தேர்தல் தொடர்பான நிகழ்வுகள் அனைத்தும் தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைமையிலேயே நடைபெற வேண்டும் என எடப்பாடி தரப்புக்கு, பாரதிய ஜனதா தலைவர் திரு. அமித் ஷா உத்தரவிட்டுள்ளார்.
வரும் நாடாளுமன்ற தேர்தலில், தமிழகத்தில், எடப்பாடி அணி, பா.ஜ.க. பா.ம.க. உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்துள்ளன. இந்நிலையில், மதுரை வருகை தந்த பாஜக தலைவர் திரு. அமித்ஷாவை, எடப்பாடி தரப்பில் ஓபிஎஸ் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது, ஓபிஎஸ்-யிடம் அமித் ஷா சில அதிரடி நிபந்தனைகளை விதித்துள்ளார்.
தமிழகத்தில், நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணிக்கான தலைமை பாரதிய ஜனதாவாகவே தோற்றம் அளிக்க வேண்டும் என்றும், தேர்தல் தொடர்பான நிகழ்வுகள் அனைத்தும் தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைமையிலேயே நடைபெற வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
தேமுதிகவுடனான கூட்டணி பேச்சுவார்த்தையில் இழுபறி நீடிப்பது குறித்தும் ஆலோசனை நடைபெற்றதாக தகவல் வெளியாகிவுள்ளது.