நாடாளுமன்றத் தேர்தலில் அ.ம.மு.க. கூட்டணி வேட்பாளர்கள் வெற்றிபெற கடுமையாக பாடுபடுவோம் : SDPI கட்சியினர் அறிவிப்பு
Mar 19 2019 12:48PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நாடாளுமன்றத் தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் தலைமையிலான கூட்டணி வேட்பாளர்களை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற கடுமையாக பாடுபடுவோம் என SDPI கட்சியினர் அறிவித்துள்ளனர்.
மதுரை மாவட்ட SDPI கட்சி சார்பில் செயல் வீரர்கள் ஆலோசனைக் கூட்டம், மாவட்ட தலைவர் திரு. முஜிபுர் ரஹ்மான் தலைமையில் நடைபெற்றது. மதுரை நாடாளுமன்ற தொகுதி கழக வேட்பாளர் திரு. டேவிட் அண்ணாத்துரையை 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற செய்யும் வகையில் தேர்தல் பணிகளை ஆற்றுவது எனவும், எடப்பாடி தரப்பு - பாஜக அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளை தோலுரித்து காட்டி, கழக வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொள்வது என ஆலோசிக்கப்பட்டது. இந்தக்கூட்டத்தில், அக்கட்சியின் நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.